Thursday, December 2, 2021

மொபைல் உபயோகிப்பதால் கை விரல்கள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன; சரிசெய்ய முடியுமா?

*மொபைல் உபயோகிப்பதால் கை விரல்கள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன; சரிசெய்ய முடியுமா?*

மொபைலை ஒரே கையில் பிடித்துக்கொண்டிருந்தால் விரல்கள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன. இதற்கு என்ன காரணம்... சரிசெய்ய முடியுமா?

நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயிநரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி.

``செல்போனை பிடித்தபடி பேசும்போது அதன் ஒரு முனை மணிக்கட்டுப் பகுதியில் படும். மணிக்கட்டின் நடுப்பகுதியில் மீடியன் நரம்பு என ஒன்று இருக்கும். மொபைல்போனில் பேசும்போது அந்த நரம்பு அழுத்தப்படலாம்.

அந்தப் பகுதியின் மேல் பகுதியைப் பாதுகாக்கும்படி எலும்பு எதுவும் இருக்காது. மென்மையான திசுக்கள் மட்டுமே இருக்கும். மீடியன் நரம்பு அழுத்தப்படுவதால் கட்டைவிரல் மற்றும் அதையடுத்து மோதிரவிரல் வரைகூட இந்த இழுத்துப் பிடிக்கும் உணர்வு வரும். ஹைப்போ தைராய்டு பாதிப்புள்ளவர்களுக்கு விரல்கள் பிடித்துக்கொள்ளும் இந்த பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.

செல்போனை கையில் வைத்துப்பேசும்போது அதை விரல்களில் மட்டும் பிடித்தபடியும், மீடியன் நரம்பை அழுத்தாமலும் உபயோகிக்க வேண்டும். நீண்டநேரம் மொபைல் போனை கையில் வைத்துப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு இது உதவும். நீண்டகாலமாக செல்போன் உபயோகித்ததன் விளைவாக, நீண்டகால வலியை அனுபவிப்பவர்களுக்கு சில டெஸ்ட்டுகள் தேவைப்படும். முதல் கட்டமாக `நர்வ் கண்டக்ஷன் ஸ்டடி' (Nerve conduction study) என்பது மேற்கொள்ளப்படும்.

கரன்ட் ஷாக் கொடுத்து, நரம்பில் அது எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பது பதிவுசெய்யப்படும். மணிக்கட்டின் மேல் ரிசீவர் போன்ற ஒன்றை வைத்துவிட்டு, அதன் மேல் கரன்ட் வைத்து தூண்டப்பட்டு இது செக் செய்யப்படும். அந்த வேகம் குறைவாக இருக்கும்பட்சத்தில்தான் விரல்களில் இதுபோன்ற வலி, இழுக்கும் உணர்வு போன்றவை வரும்.



டெஸ்ட்டில் இது உறுதிசெய்யப்பட்டால், முதலில் வாழ்வியல் மாற்றம் பரிந்துரைக்கப்படும். அதாவது எந்த வேலையைச் செய்தாலும் கை மற்றும் விரல்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது. எழுதுவது, பைக் ஓட்டுவது என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். சமையல் வேலைகள் செய்வதால் பெண்களுக்கு இந்தப் பிரச்னை மிகவும் சகஜமாக வரலாம். அவர்களுக்கும் சமைக்கும்போது கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் விரல்களை மட்டும் உபயோகிக்கும்படி கற்றுக்கொடுக்கப்படும். இவற்றைக் கடைப்பிடித்தாலே வலி குறையத் தொடங்கும். அப்படிக் குறையாதவர்களுக்கு தற்காலிகமாக வலியைக் குறைக்கும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். அதையும் தாண்டி, வலி தீவிரமாக இருந்தாலோ, நரம்பு பாதிப்பு அதிகமிருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும். மீடியன் நரம்பை முடியிருக்கும் இடத்தை அறுவைசிகிச்சையின் மூலம் திறந்துவிட்டால் சரியாகிவிடும்.
*ADMISSION GOING ON ACUPUNCTURE*
 தலைவலிக்கு என்ன தீர்வு?

நடுத்தர வயதிலுள்ளோரையே இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கும். டீன் ஏஜில் மொபைல் பயன்பாடு அதிகம் என்பதால் அந்த வயதிலிருந்தே ஆரம்பிக்கும் பிரச்னை, மெள்ள மெள்ள அதிகரித்து, குறிப்பிட்ட வயதில் தீவிரமாகும். மொபைல் பயன்படுத்தும்போது கழுத்தின் பொசிஷன் சரியாக இல்லாவிட்டாலும் கழுத்து நரம்பும் பாதிக்கப்படும். அதன் காரணமாகவும் இழுக்கும் உணர்வு ஏற்படலாம்."

Sunday, July 5, 2020

Happy

Happy

Sunday, October 27, 2019

Tamil - பப்பா ராவல்

சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று பெயர் பெற்ற இங்கிலாந்து தேசத்தை கூட ஏசு பிறப்பதற்கு முன் அன்று ஜுலியஸ் சீசர் தலைமையிலான ரோம தேசம் அடிமைப்படுத்தியது...

இன்று அமெரிக்காவையே மிரட்டிக் கொண்டிருக்கும் சீன தேசத்தை அன்று மங்கோலியா என்கிற தம்மாத்துண்டு தேசம் அடிமைப்படுத்தியது.

எனக்குWorld பூரா நண்பர்கள் இருக்காங்க. நான் இங்கிலாந்தில் வாழும், சைனாவில் வாழும் நண்பர்களிடம் Facebook, Whatsapp மூலமாக கேட்டேன்.

ஜுலியஸ் சீசர் அன்று இங்கிலாந்தை அடிமைப் படுத்தி ஆண்டதை பற்றி இன்று இங்கிலாந்தில் உள்ள மாணவ, மாணவிகள் ஸிலபஸில் படித்து கொண்டிருக்கிறார்களா? என்று. அதற்கு இங்கிலாந்து நண்பர் சொல்கிறார். இல்லை. இங்கிலாந்து மற்ற தேசங்களை அடிமைப்படுத்தி ஆண்ட வரலாறுகளைதான் இங்கே நாங்கள் படித்தோம், படித்து கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அடிமைப்படுத்தப் பட்ட வரலாறு மருந்தளவில் தான் எங்களுக்கு பாடங்களில் சொல்லப்படுகிறது.

இதே கேள்வியை நான் ஒரு சீனரிடம் கேட்டேன். செங்கிஸ்கான் என்னும் பேரரசன் தலைமையில் சின்னஞ்சிறிய மங்கோலிய தேசம் உங்கள் நாட்டை அன்று அடிமைப்படுத்தியதே. அதை பற்றி சீன மாணவ, மாணவிகள் இன்று பாட புத்தகத்தில் படித்து கொண்டிருக்கிறார்களா?

அதற்கு அந்த சீனர் என்னிடம் கேட்டார். யார்? அந்த செங்கிஸ்கான்.

அதாவது சீன தேசம் அன்று அடிமைப்படுத்தபட்ட வரலாறு மருந்தளவுக்கு கூட சீனர்களின் பாட புத்தகத்தில் இல்லை.

ராஜேந்திர சோழன் அன்று மலேசியா முதல் ஜப்பான் வரை பல நாடுகளை வென்று அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் அன்று எழுப்பிய வெற்றி ஸ்தூபிகள்... பின்னர் அங்கே வந்த ஆட்சியாளர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்டது.

அதே சமயம் நமது இந்தியாவில்....???? கயவர்கள் ஆண்டதினால்

Qutb-ud-din Aibak என்னும் அடிமை டெல்லியை தந்திரமாக கைப்பற்றி அதை கொண்டாடும் விதமாக... அவன் அன்று எழுப்பிய வெற்றி ஸ்தூபியை இன்றும் நம் அரசு பாதுகாக்கிறது.

நான் டெல்லி டூர் சென்றிருந்த பொழுதுQutb மினாரைப்பார்த்தேன். It's Realy Beautiful யா என்று பெருமையாகப் பீத்தி கொள்ளும் நம் தேசத்து அடிமை மக்கள்

த்தூ................

நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன். சொந்த வரலாறை இழந்த தேசம் புதிய வரலாறைப்படைக்க முடியாது. நாம் நமது சுயத்தை இழந்துவிட்டோம். பல ஆயிரம் ஆண்டுகள் பல தேசங்கள், பல கண்டங்களை ஆண்ட வரலாறை நாம் இழந்து விட்டோம்.

நாம் இழந்த நமது வரலாற்றுப் பெருமையை மீட்டெடுக்க வேண்டியது தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனின் கடமை.

Algeria, Andorra, Armenia, Azerbaijan, Bahrain, Cyprus, Egypt, Georgia, Iran, Iraq, Israel, Jordan, Kazakhstan, Kuwait, Kyrgyzstan, Lebanon, Libya, Morocco, Oman, State of Palestine, Palestinian Authority, Portugal, Qatar, Saudi Arabia, Spain, Syria, Tajikistan, Tunisia, Turkey, Turkmenistan, United Arab Emirates, Uzbekistan, Western Sahara, Yemen ரஷ்யாவின் பல பகுதிகளை முதற்கொண்டு35 நாடுகளை ஒரே குடையின் கீழ் ஆண்ட, ஒரு கோடியே 50 லட்சம் கிலோ மீட்டர் நிலபரப்பை ஆண்ட ஆனானப்பட்ட Umayyad Caliphate சாம்ராஜ்ய சக்கரவர்த்தி Muhammad Bin Quasm லட்சம் வீரர்களோடு சிரியா தேசத்தில் இருந்து சீறிப் பாய்ந்து கிபி 715 இல் இந்தியா வந்தான்.

அவன் படையிலுள்ள ஒவ்வொரு வீரனும் 4 காட்டெருமைகளுக்கு சமமான பலம் கொண்டவர்களாம். அப்படியென்றால் அந்த ஒட்டுமொத்த படையையும் வழிநடத்திய Muhammad Bin Quasm மின் ஆற்றல் எத்தகையதாக இருந்திருக்கும் என்று சற்றே யோசித்துப்பாருங்கள்.

அத்தகைய அந்த பலமிகுந்த கலிபா காட்டுமிராண்டிப் படையை வெறும் 40 ஆயிரம் வீரர்களை கொண்டு வென்ற உலக மாவீரர்களில் நம்பர் 1 வீரரான பப்பா ராவல்Bappa Rawal பற்றி State Board Syllabus-ல் இல்லை... CBSE Syllabus-லும் இல்லை. அப்ப,CBSE ஸிலபஸைக்காட்டிலும் தரமானது என்று சொல்லப்படும்ICSE ஸிலபஸிலும் இல்லை.  பின்ன அவரின் வரலாறு வேறு எதில்தான் இருக்கு ???  குழந்தைகள் படிக்கும் அமர்சித்திர கதாகாமிக்சில் இருக்கு... வெட்கக்கேடு அவமானம்....

முகலாயர்கள், பிரான்ஸ்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், இறுதியாக வெள்ளையர்கள் வரை... நாம் அடிமைப்படுத்தப்பட்ட ஆயிரம் ஆண்டு வரலாறுகளை தான் நாம் திரும்ப, திரும்ப, திரும்ப, திரும்ப படிக்கிறோம்...

9 ஆயிரம், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகத்தோடு நாம் வாழ்ந்த வரலாற்றை படிப்பதில்லை.

Bappa Rawal மட்டும் அன்று கலிப்பா காட்டுமிராண்டிகளை தோற்கடிக்காதிருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் தெரியுமா???

கிபி 715 களிலேயே இந்தியா அரேபியர்களுக்கு அடிமையாகி இருக்கும்.

விஜயாலயன் தலைமையில் வீறு கொண்டு சோழ தேசம் எழுந்திருக்காது.

ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டியிருக்க முடியாது...

ராஜேந்திர சோழன் ஒட்டுமொத்த தெற்காசியாவையும் ஆண்டிருக்க முடியாது. இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்.

காரணம் இந்த கலிப்பா சாம்ராஜ்யம் முகல் சாம்ராஜ்யத்தை பல மடங்கு வலிமை வாய்ந்த சாம்ராஜ்யம்.

14ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர்... 10 லட்சம் வீரர்களோடு நம் இந்தியா மீது படை எடுத்து வந்து மதுரை, தஞ்சை, ஸ்ரீரங்கம் எனப்பல இடங்களில் ரத்த ஆற்றை ஓட செய்தானே!. ஞாபகம் இருக்கிறதா ???

14ம் நூற்றாண்டில் நடந்த அதேகொடுமை எட்டாம் நூற்றாண்டில் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்??. சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

மாமன்னர்Bappa Rawal ராஜஸ்தானில் மேவாட் என்கிற சாம்ராஜ்யத்தை தோற்றுவித்தார்.

அவர் தோற்றுவித்த அந்த சாம்ராஜ்யம் தொடர்ந்து500 ஆண்டுகள் நீடித்து நின்றது. Bappa Rawal பயன்படுத்திய வீரவாளின் எடை 264 கிலோ...

நீங்கள் நம்புகிறீர்களா இல்லையோ. அவ்வளவு எடை உள்ள அந்த கத்தியைதான் அவர் ஒற்றை கையில் தாங்கி அதை வைத்து  கலிபா படையை சுற்றி, சுற்றி அடித்தார்.

Bappa Rawal, லலிதாதித்ய முக்த பீடர் போன்ற இந்தியாவின் நிஜ ஹீரோக்களை முன்வைத்து இயக்குனர் ராஜமௌலி அவர்கள் திரைப்படமாக எடுத்தால்.

அதன்மூலம் வீரம் மிகு இந்தியாவின் வரலாறை உலகமே பார்க்கும்.

பாகிஸ்தானில் இருக்கும் ராவல்பிண்டி என்கிற பெரிய நகரம். அன்று பப்பா ராவல் Bappa Rawal அவர்கள் தனது போர் வெற்றியை கொண்டாடும் விதமாக உருவாக்கிய நகரம்.

எங்கள் வரலாறு இன்னும் ஏராளம் ஏராளம்...!!!ஏராளமப்பா.

....படித்ததை பகிர்கின்றேன்

Vaidya K Iyer

Saturday, October 26, 2019

Tamil 2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தெருக்களில் நிலத்தடியில் அமைக்கப்பட்ட குழாய்கள்

பரிபாடலும்.. கீழடியும்..
கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வில், சுடு மண் குழாய்கள் வெளிப்பட்டன. இக்குழாய்கள் நிலத்தடியில் புதைக்கப்பட்டு நீர் செல்லும் குழாய்களாக ( Under ground pipe line)
இருந்தது..
மேற்கண்ட செய்தியை நன்கு நினைவில் இருத்தி, சங்கஇலக்கிய பரிபாடலில் வரும் ஒரு பாடலைப் பார்க்கிறோம்.
பரிபாடல்.. 20.
வைகை என்னும் தொகுப்பில் உள்ள பாடல்களின் சுருக்கம் இது..
மதுரை..
இது ஒரு மழைக் காலம்.
கடலில் படிந்த மேகங்கள் மேலெழும்பி சூல் கொண்டு மலைப்பாறைகள் சிதையுமாறு பெருமழையாக பெய்யத் தொடங்கியது.
தன்னோடு போர் புரிந்த புலியை தன் தந்தத்தால் குத்திக் கொன்ற யானையின் தந்தத்தின் மேல் படிந்திருந்த குருதிக்கறையை இம்மழை நீர் கழுவி சுத்தம் செய்தது.
மதுரை மக்கள் துயில் கொள்ளும் இரவு நேரத்தில் பெய்த இம்மழை நீர், புது வெள்ளமாய் வைகை ஆற்றில் கரைபுரண்டது.
இந்த நீரானது மதுரை நகரின் கோட்டைச் சுவர்களின் மீது மோதி பலத்த ஒலியை எழுப்பியது.
சத்தம் கேட்ட விழித்த மக்கள் புது வெள்ளத்தைப் பார்க்க வைகைக்கு விரைகின்றனர். நாமே முந்திச் சென்று பார்க்க வேண்டும் என அனைவருக்கும் ஆர்வம். அவசரம்.
தூக்க மயக்கம் வேறு.
தேரில் பூட்டவேண்டிய குதிரைகளை வண்டியிலும், வண்டி எருதுகளை தேரிலும் பூட்டினர். குதிரைக்குப் போடவேண்டிய சேணத்தை யானைக்கு இட்டனர். ஒரு சிலரோ எதுவும் போடாமல் யானை குதிரை மீது அமர்ந்து சென்றனர்.
( நாம இன்று சைக்கிள் பைக் கார் வைத்திருப்பது போல்..
அவர்களுக்கு தேர், வண்டி, குதிரை )
ஆண்கள் அணியும் ஆபரணங்களை பெண்களும், பெண்களின் முத்துமாலைகளை ஆண்களும் அவசரத்தில் அணிந்து விரைந்து சென்றனர்.
வைகையின் இருகரைகளும் புது நீரால் பொங்கி வழிந்தது. அதைப்பார்த்து களிப்புறும் மதுரை மக்கள்.
கூட்டத்தில் இருக்கும் பெண்கள் மற்ற மகளிர் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களைக் கண்டு சிலிர்த்தனர்.
( இந்தப் பிரச்சனை இப்போதும் இருக்கோ)
தோழி ஒருவர் ஒரு பரத்தையின் கழுத்தில் இருக்கும் நகையைக் கண்டு அதிர்வுற்றார்.
ஆகா.. இது தன் தலைவியின் நகைதானே. பரத்தையிடம் எப்படி.?
பிரச்சனை ஆரம்பம்.
( இது தனி பஞ்சாயத்து.
நமக்கு வேண்டாம்)
இவ்வாறான வைகையில் பெருக்கெடுத்த புது நீர்,
காடுகள், கழணிகள் வழியே பாய்ந்து சென்று ஊருக்குள் கடந்து சென்றது..
எப்படி சென்றது..
பாடல் 20..
104 - 107. வரிகள்.
_நெடுமால் *சுருங்கை நெடுவழிப் போந்து*_
_கடுமா களிறணத்துக் கைவிடுநீர் போலும்_
_*நெடுநீர் மலிபுனல்* நீள்மாடக் கூடல்_
_கடிமதில் பெய்யும் பொழுது_
இப்பாடலில் வரும் சுருங்கை என்பதுதான் தற்போதைய கீழடியில் கிடைத்துள்ளது. நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் நீர் குழாய்க்கு சுருங்கை என்று பொருள்.. அதாவது Underground pipe line..
பாடலின் பொருள்...
இவ்வாறான வைகை நீர் பெரிய மாளிகைகள் உடைய மதுரை நகரின்
(நீள்மாடக்கூடல்) நிலத்தடியில் புதைக்கப்பட்ட நீண்ட குழாய்கள் வழி ஓடியது.
( நெடுமால் சுருங்கை நெடு வழிப் போந்து) .
மதில்களின் கீழ் அமைந்த வெளியேறும் குழாய் ( சுருங்கை) வழியாக வெளியேறியது. இது சினம் கொண்ட யானை ஒன்று தன் தும்பிக்கைத் தூக்கி நீரை பீய்ச்சி அடிப்பதுபோல் இருக்கிறது..
ஆக..
2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தெருக்களில் நிலத்தடியில் அமைக்கப்பட்ட குழாய்கள் இருந்தது. மழை நீரோ, கழிவு நீரோ
இக்குழாய்களின் வழியே ஓடி வெளியேறியது.
பரிபாடலில் கூறப்பட்ட இக்குழாயின் வடிவம்தான் தற்போது கீழடியில் வெளிப்பட்டது.
சற்றும் தயக்கமில்லாமல் சொல்வோம்...
" *தமிழன்டா* "...

Monday, October 21, 2019

Tamil - அளவுகளைக் கொண்டமைந்த தமிழ்ப் பாடல

அளவுகளைக் கொண்டமைந்த தமிழ்ப் பாடல்.

*முக்காலுக்கு ஏகாமுன் முன் அரையில் வீழாமுன்*
*அக்கால், அரைக் கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி*
*இருமாமுன் மாகாணிக்கேகாமுன்- கச்சி*
*ஒரு மாவின் கீழரை இன்று ஓது*

*பொருள்*
முக்காலுக்கு ஏகா முன் - தள்ளாமையால் மூன்றாவது காலாகக் கைத்தடியை நாடு முன் ,

முன் நரையில் வீழா முன் - தலையில் நரை முடி தோன்றும் முன்,

அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் -  காலனின் கால் நம்மை நாடி வரும் முன்,

விக்கி இருமாமுன் விக்கல், இருமல் இவைகளால் துன்பப் படும் முன்னால்,

மாகாணிக்கு ஏகாமுன் - இறுதி யாத்திரைக்குச் செல்லா முன்

கச்சி ஒரு மாவின் கீழரை கச்சியில் -  மாமரத்தின் கீழ் உள்ள சிவனை

இன்று ஓது - இன்றே வணங்கு !

*அது சரி ! கணக்கு/அளவு  எங்கே ? பாடலை மீண்டும் பாருங்கள்*

ஒன்றை விட சிறிய பின்னங்கள் ! (இறங்கு வரிசையில்

முக்கால் 3/4
அரை 1/2
கால் 1/4
அரைக்கால் 1/8
இருமா 1/10
மாகாணி 1/16
ஒரு மா 1/20
கீழரை 1/256

*நல்ல தமிழ் அறிவோம்*

Sunday, October 20, 2019

முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து - வலம் இடமாக வாசிக்கவும

சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து - வலம் இடமாக வாசிக்கவும். வரும் வார்த்தை- அதே;அதே.

கம்பம்
பொன்னன்
ரம்பம்
பாதிமதி
சிம்மம்
நீதிபதி
கும்பம்
அன்பன்
அதிபதி
காசிவாசி
கோடுபோடு
இடுகாடு- சுடுகாடு
வீடுதேடு
கோல்மால்
பாசிஊசி
ஆல்போல்
பிம்பம்
சோலைமலை
கடைமடை
கூடைமுடை
சடுகுடு
சின்னன்- சின்னான்
மெய்யாய்-பொய்யாய்
கைலைமலை
பாரிஓரி
மன்னன்.......... இதையறிந்து தான்....,                                   யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழிபோல்  இனிதாவதெங்குங் காணோம்.... என்றானோ  மகாகவி பாரதி.

Saturday, September 21, 2019

டோல்கேட்

காரில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள் கவனத்திற்கு நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் செல்கையில் கொடுக்கும் பணம். டோல்கேட்  கிராஸ் செய்வதற்கு மட்டும் அல்ல.  பணத்தைக் கட்டி ரசீது  கொடுப்பார்கள்.அதை பத்ரமா வைத்து கொள்ளவும்.

உங்க பயணம் எந்த சிரமும் இல்லாமல் இருக்கவும் அப்படி இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்து தான் அந்த பணம் செலுத்துகிறோம்..

காரில் செல்பவர்கள் யாருக்காவது

1 .மருத்துவ உதவி தேவைப்பட்டால்  ரசீதின் பின்புறம் நம்பர் போட்டுருப்பாங்க அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ்  பத்து நிமிஷத்துல வரும்.

2. வண்டி பழுதாகி நின்றாலோ அல்லது பஞ்சர் ஆகி விட்டாலும் அதுக்கு இன்னொரு நம்பர் இருக்கும் அதற்கு போன் செய்தால் பத்து நிமிஷத்துல உங்களுக்காக வந்துருவாங்க வந்து  பஞ்சர் போட்டு கொடுத்துடுவாங்க ரிப்பேர் எனில் அதையும் சரி செய்து கொடுத்து வாங்க இது அவங்க கடமையாகும்.

3.பெட்ரோல்,டீசல் இல்லாமல் வண்டி நின்று விட்டால். தகவல் சொன்னா உங்களுக்கு  அஞ்சு லிட்டர் அல்லது 10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை கொண்டு வந்துவிடுவார்கள். அதுக்குண்டான பணத்தை கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாம் சேர்த்துத் தான் நம்ம கிட்ட வசூல் பண்றாங்க இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாமல் ஏதாவது பிரச்சினை ஆச்சுன்னா தவிச்சு போறாங்க,அலையுராங்க இதை தவிர்க்க இந்த செய்தியை அனைவரிடமும் கொண்டு செல்லவும்வும்.